தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது. பயங்கர வெள்ளத்தில் சிக்கி மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். மேலும் உணவு, தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் சிப்காட் காவல் துறை உதவியுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வெள்ளத்தில் தவித்து வந்த பெண்கள், குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.

நேற்று அந்தோனியாபுரத்தில் இருக்கும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணியினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆத்தூர், ஏரல், அகரம், ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.