எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சர்வோட்டம் நிரந்தர வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 15 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு 8.14 சதவீதம் வட்டியும், ஒரு வருடத்திற்கான வைப்பிற்கு 7.6% அளவிலான வட்டியும் சீனியர் சிட்டிசன்களுக்கு அளிக்கப்படுகிறது.

சீனியர் சிட்டிசன் அல்லாத பொது மக்களுக்கு சர்வோட்டம் நிரந்தர வைப்பு திட்டத்தின் கீழ் 7.4 சதவீதம் அளவிலான வட்டி அளிக்கப்படுகிறது. இந்த வட்டித் தொகை பிபிஎஃப், என்எஸ்சி, மற்றும் அஞ்சலக வைப்பு திட்டங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.