பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறிய வாகன ஓட்டிகள் அபராத தொகையை 50 சதவீத தள்ளுபடியில் செலுத்த மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக போக்குவரத்து காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருந்தது. மேலும் கோடிக்கணக்கான ரூபாய் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை வசூல் ஆகாமல் இருந்து வந்தது. எனவே இந்த வழக்குகளுக்கு தீர்வு காணும் விதமாக 50 சதவீத தள்ளுபடியில் அபராதம் செலுத்தலாம் என்று போக்குவரத்து போலீசார் கூறியிருந்தனர்.

அதன்படி பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதியிலிருந்து பதினோராம் தேதி வரை 9 நாட்களுக்கு தள்ளுபடியில் மக்கள் அபராத தொகையை செலுத்தினர். அதன்படி பெங்களூருவில் மட்டும் 120 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூல் ஆகி இருந்தது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் மேலும் சில நாட்கள் இந்த தள்ளுபடியை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மேலும் 15 நாட்கள் 50 சதவீத சலுகை முறையில் வாகன ஓட்டைகள் அபராதம் செலுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.