விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திடலில், பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று 12-ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை தமிழ் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கீழ்பெரும்பாக்கம் பகுதி பொதுமக்களின் சார்பாக நடத்தப்பட்டது. மேலும் இப்போட்டியில் மகளிர்களுக்கு இசை நாற்காலி, கயிறு இழுத்தல், கோகோ, கோலப்போட்டிகள் நடைபெற்றது. அதேபோல் சிறுவர், சிறுமிகளுக்கு லெமன் ஸ்பூன், கபடி, சாக்கு ஓட்டப்பந்தயம், குறைந்த வேக சைக்கிள் பந்தயம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டது.

இந்த போட்டிகளில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகள் மற்றும் மகளிர்கள் அனைவரும் ஆர்வத்தோடு கலந்துகொண்டு விளையாடினார்கள். இதையடுத்து போட்டிகள் நிறைவடைந்த பின், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து மாலை நேரத்தில்  கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் விழுப்புரத்திற்கு அருகேயுள்ள  நல்லரசன்பேட்டை, சகாதேவன்பேட்டை, சாலாமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.