சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இன்றைக்கு, பாஜக – அதிமுக போன்ற வெகுஜன விரோதிகளோடு மோதிக்கிட்டு இருக்கோம். பாசிசத்துக்கு எதிராக நேரடியா மோதிக்கிட்டு இருக்கோம். எப்படியாவது சாதியின் பெயரால மதங்களின் பெயரால… பிளவு படுத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்கூடிய ஒரு கூட்டத்துக்கு எதிரா…. நாம மோதிக்கிட்டு இருக்கோம்.

பாஜக உடைய சதித்தன்மையை ஏதோ நமக்கோ,  நம்முடைய இயக்கத்திற்க்கோ, கொள்கைக்கோ,  நம்முடைய தமிழ்நாட்டுக்கோ மட்டும் எதிரானது அல்ல,  இந்தியாவுக்கே எதிரானது. இப்படிபட்ட  பாசிசவாதிகள் ஒரு பக்கம். இவர்களுடைய பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டில் உரிமையை அடக்கு வைத்த அடிமை அதிமுக ஒரு பக்கம்.

கொள்கைனா.. கிலோ என்ன விலை ? என்று கேட்கிற கொள்கை அற்ற கூட்டம் தான் அதிமுக.  இனிமேலும் பாஜகவுடன் இருந்தா தமிழ்நாட்டு மக்களால் நிச்சயமாக புறக்கணிக்கப்படுவோம் என  பயந்து,  உள்ளே,  வெளியே ஆட்டம் ஆடிட்டு இருக்காங்க. தமிழ்நாட்டை  அழிக்க நினைக்கிற பாஜகவும்,  அண்ணா பெயரால் கட்சி நடத்திய அதிமுகவும் வேறு, வேறு அல்ல.  நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள், இருவரும் அப்படித்தான் என விமர்சித்தார்.