திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் காவலர் குடியிருப்பு பகுதியில் எலக்ட்ரீசியனான சந்தனகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அனிதா போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட சந்தனகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலை சரியாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தனகுமார் தனது வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு ஏ.சி எந்திரத்திற்கு செல்லும் மின்சார ஒயரை தனது கால்களில் சுற்றிக்கொண்டு, மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு கொண்டார்.

இதனால் மின்சாரம் பாய்ந்தும், கழுத்து இறுக்கப்பட்டும் சந்தனகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக மின்சாரம் பாய்வதால் என்னை யாரும் தொட வேண்டாம் என கடிதத்தில் எழுதி அறையின் வெளியே வைத்திருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதது போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தன குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.