விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மாநில சிறுபான்மை ஆணையம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சு போட்டியை நடத்தியுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு படிக்கும் சக்தி கிருபா என்ற மாணவி மானுட சேவையின் தேவை என்ற தலைப்பில் பேசி முதலிடம் பிடித்தார். இந்த மாணவிக்கு முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில் சாதனை படைத்த மாணவியை முதல்வர் பாலமுருகன், ஆங்கிலத்துறை தலைவர் பெமினா பேராசிரியர்கள் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.