புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாக்குறிச்சிப்பட்டியில் ஆலமரம் ஒன்று உள்ளது. இது 200 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்நிலையில் நேற்று திடீரென ஆலமரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வெப்பம் தாங்காமல் மரம் தீப்பற்றியதா அல்லது மர்ம நபர்கள் யாராவது மரத்திற்கு தீ வைத்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.