விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரில் ஆறுமுகசாமி- கணேஷ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் கணேஷ்வரி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 2-வது மகள் முனீஸ்வரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடத்த நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் தாய் உயிரிழந்த மூன்று மாதங்களுக்குள் தனக்கு திருமணம் வேண்டாம் என முனீஸ்வரி கூறிவந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முனீஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனீஸ்வரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.