விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இனாம் செட்டிகுளத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முருகேசன் என்பவருடன் ஆட்டோவில் பெயிண்ட் ஏற்றிக்கொண்டு வெம்பக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடையில் பெயிண்ட் இறக்கி வைத்துவிட்டு மீண்டும் அவர்கள் ஆட்டோவில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து கே.லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் முருகேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.