விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் சுந்தர்ராஜ்(80) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.