திருச்சி மாவட்டத்தில் உள்ள களத்துப்பட்டியில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சத்தியமூர்த்தி கேட்டரிங் முடித்துள்ளார். இவரது சகோதரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாமா மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த சத்தியமூர்த்தி தனது சகோதரியை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்ததால் சத்தியமூர்த்தி விஷம் குடித்து விட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சத்தியமூர்த்தியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சத்தியமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.