கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னகிணத்துப்பட்டி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(24) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி ரம்யாவுக்கும் திருப்பூரைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் தாந்தோணிமலை கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 29-ஆம் தேதி மறுவீட்டு அழைப்பிற்காக கணவன், மனைவி இருவரும் சின்னகிணத்துப்பட்டிக்கு வந்தனர்.

அன்று மதியம் தனது வீட்டு மாடியில் ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ரம்யாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ரம்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திருமணமான மறுநாளே ரம்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.