கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் அர்ஜுன தெருவில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவசாமி வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது அதே பகுதியில் வசிக்கும் கதிரேசன் என்பவர் வீட்டிற்கு வந்து சிவசாமியுடன் தகராறு செய்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து சிவசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கதிரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.