தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது புதிய நகரம் கிராமத்தில் வசிக்கும் இளவரசன் என்பவர் மான்களை வேட்டையாடுவதற்கு வலைகளை கட்டி வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் வனத்துறையினர் இளவரசனை பிடித்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவின்படி வனத்துறையினர் இளவரசனுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.