தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்மாளப்பட்டி பகுதியில் வசிக்கும் மாணவி சேலம் சட்ட கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த மாணவி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சில வாலிபர்கள் மாணவியை கிண்டல் செய்தனர். இதுகுறித்து மாணவி தனது வீட்டிற்கு சென்று தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாணவியின் தாய் பேருந்து நிறுத்தம் அருகே சென்று வாலிபர்களை தட்டி கேட்டுள்ளார். அப்போது வாலிபர்கள் மாணவியின் தாயை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். இதுகுறித்து அரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முத்தாநூர கிராமத்தில் வசிக்கும் 7 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.