சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் லெனின் நகரில் பகத்சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவரது மகன் முருகேசன்(45) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி(4)) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பத்மஸ்ரீ(16) என்ற மகளும் புனிதன்(14) என்ற மகனும் இருக்கின்றனர்.  இந்நிலையில் முருகேசன் பங்குச்சந்தையில் பணத்தை இழந்ததால் கடன் தொந்தரவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இவர்களுக்கு சொந்தமான வீடு எல்லம்மன் பேட்டை சீனிவாசன் நகர் பெருமாள் கோவில் தெருவில் இருக்கிறது. அந்த வீட்டை சுத்தம் செய்து விட்டு வருகிறோம் என கூறிவிட்டு கணவன் மனைவி இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து புறப்பட்டனர். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அங்கு சென்ற பார்த்தபோது ஒரே கயிற்றில் முருகேசன், ஜெயந்தி ஆகிய இருவரும் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகேசன் மற்றும் ஜெயந்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.