கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரையம்பாளையம் புதூரில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி(54) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகனுக்கும், மகளுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இதனால் அவர்கள் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று காலை சுப்பிரமணி சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டார்.

இதனையடுத்து மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது சமையல் அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தங்கமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு சுப்பிரமணி கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று தங்கமணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தங்கமணியை கொலை செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.