புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்கு ஏப்ரல் 29-ஆம் தேதி பணி நாள் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.