கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்பேரி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு தனஞ்செழியன்(16), இனியவன்(13) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது நடராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகன் தனஞ்செழியன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி முடிவுக்கு காத்துக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் தனஞ்செழியன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தனஞ்செழியன் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று 226 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தேர்வு முடிவு அச்சத்தில் தனஞ்செழியன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.