கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிகுப்பத்தில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான ராஜீவ் காந்தி என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜீவ்காந்தி தனது அக்காவிடம் 100 ரூபாய் வாங்கி குளிர்பானம் குடித்துவிட்டு வருவதாக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ராஜீவ்காந்தி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

அப்போது அப்பகுதியில் இருக்கும் முருகன் கோவில் பின்வரும் ராஜீவ்காந்தி மயங்கி கிடந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராஜீவ்காந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர் இறந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.