தென்காசி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டி கீழத்தெருவில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு பாவூர்சத்திரத்தில் இருக்கும் டீ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் மாணிக்கவாசகத்தின் தந்தை பெருமாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாணிக்கவாசகம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணிக்கவாசகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.