திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்கண்டார் கோட்டை பகுதியில் என்பவர் வசித்து லியோ ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி லியோவுக்கு ரபிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான அடுத்த நாளே ரபிகாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட ரபிகாவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அப்போதுதான் ரபிகா ஏற்கனவே விஷம் தின்றது தெரியவந்தது. திருமணத்தில் விருப்பம் இல்லாததால் ரபிகா எலி பேஸ்ட்டை தின்றுள்ளார். அதனை யாரிடமும் கூறாமல் இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. நேற்று சிகிச்சை பலனின்றி ரபிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.