மிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு, +1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி அருகே அரசு பள்ளி மாணவர் அர்ஜுன் பிரபாகர் 10ம் வகுப்பு தேர்வில் 495 மதிப்பெண் பெற்று மாவட்டத்திலே முதல் ஆளாக சாதித்துள்ளார்.

தந்தையை இழந்த இவரை கூலி வேலைக்கு சென்று படிக்க வைத்துள்ளார் தாய். தாயின் உழைப்பு, ஆசிரியர்களின் உதவியுடன் தேர்வு எழுதிய இவர் தற்போது சாதனை படைத்துள்ளார். இவர் தமிழில் 97, ஆங்கிலம் 99, கணிதம், சமூக அறிவியலில் 100, அறிவியலில் 99 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.