தமிழ்நாட்டில் இன்று 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.‌ இந்நிலையில் சிறையில் இருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 98.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தேர்வு எழுதிய 203 பேரில் 9 பெண்கள் உட்பட 200 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புழல் சிறையில் உள்ள சுரேஷ் 422 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் வேலூர் சிறையில் உள்ள ராதா 414 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், பாளையங்கோட்டை சிறையில் உள்ள பாலசுப்ரமணியன் 413 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.