நீலகிரி மாவட்டத்திலுள்ள உப்பட்டியில் தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முதியவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர் அதே பகுதியில் வசிக்கும் ரகுபதி என்பதும், தடையை மீறி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதே போல் மன்னார்காடு பகுதியில் வசிக்கும் சஞ்சீவி, சங்கரன் குட்டி ஆகியோரும் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரகுபதி உட்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.