திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் கிருஷ்ணா நகரில் ஆண்டாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பழனியப்பா என்பவருக்கும் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று பழனியப்பா ஆண்டாளின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

மேலும் கத்தியை காட்டி பழனியப்பா ஆண்டாளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்டாள் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பழனியப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.