திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு பாப்பாங்குளம் மகாராஜபுரத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாராஜன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மகாராஜன் தனது தாயிடம் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் தனது வீட்டில் மகாராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மகாராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.