திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மாதம்தோறும் கோவிலில் இருக்கும் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படும். நேற்று கருட மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்நிலையில் 65 லட்சத்து 25 ஆயிரத்து 800 ரூபாய் பணம், 112 கிராம் தங்கம், 1123 கிராம் வெள்ளி, 1088 வெளிநாட்டு பணம் வசூல் ஆனதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.