திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாணான் குளத்தில் அலெக்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் திருநெல்வேலியில் பொருட்கள் வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அலெக்ஸும் கிருஷ்ணவேல் என்பவரும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மூன்றடைப்பு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் பக்கவாட்டில் இருக்கும் இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அலெக்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிருஷ்ண வேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.