புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பனங்குளம் தெற்கு கிராமத்தில் ஆடிட்டரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகள் தரண்யா அறந்தாங்கியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 20- ஆம் தேதி நடைபெற்ற இயற்பியல் தேர்வை தரண்யா சரியாக எழுதவில்லை. இதனால் சோகமாக இருந்த தரண்யாவுக்கு பெற்றோர் ஆறுதல் கூறியுள்ளனர்.

நேற்று மாலை மன உளைச்சலில் இருந்து தரண்யா தனது வீட்டு 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தரண்யாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் தரண்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.