சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் தமிழ்ச்செல்வன். இந்நிலையில் தமிழ்ச்செல்வனுக்கும் கே.பி கரட்டை பகுதியை சேர்ந்த விக்னேஷ், சதீஷ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை சங்கர் தட்டி கேட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் விக்னேஷும், சதீஷும் இணைந்து சங்கரை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த சங்கர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விக்னேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.