திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓசூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேல்(32) என்ற மகன் இருந்துள்ளார் . இந்நிலையில் வடிவேல் அதே பகுதியில் வசிக்கும் சங்கர்(35), ஆனந்தன்(45), சிவராமன்(32), பிரகாஷ்(37) ஆகிய 5 பேரும் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேத்துப்பட்டு பகுதிக்கு காரில் சென்று பட்டாசுகளை வாங்கியுள்ளனர். பின்னர் அவர்கள் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சேத்துப்பட்டு- தேவிகாபுரம் இடையே கிழக்குமேடு பகுதியில் சென்ற போது அந்த வழியாக சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து கார் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி வடிவேல், சங்கர், ஆனந்தன், சிவராமன் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.