கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சமத்தூர் அம்பாள் கார்டன் பகுதியில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விவேக் சமத்துவ மணல்மேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்களான சசி, சுபகிரி ஆகியோர் விவேக்கிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு விவேக் தன்னிடம் பணம் இல்லை என கூறினார்.

இதனால் கோபமடைந்த சசியும், சுபகிரியும் விவேக்கை தகாத வார்த்தைகளால் திட்டி பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த விவேக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சசி, சுபகிரி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.