கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் வசிக்கும் தொழிலாளிக்கு 9 வயதில் மகளும், 4 வயதில் மகனும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று தொழிலாளி தனது மனைவியுடன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனால் இரண்டு குழந்தைகள் மட்டும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த சந்தோஷ்(23) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதனால் அச்சத்தில் சிறுமி அலறி சத்தம் போட்டதால் பக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.