விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து நல்லாங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை நமச்சிவாயம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தும்முசின்னப்பட்டி கிராமத்திற்கு பேருந்து வந்த போது அதே கிராமத்தில் வசிக்கும் ஜெயராமன் என்பவர் இருசக்கர வாகனத்தில் நடுரோட்டில் நின்று செல்போன் பேசி கொண்டிருந்தார்.

உடனே நமச்சிவாயம் அவரை ஒதுங்கி நிற்குமாறு கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ஜெயராமன் பேருந்தில் ஏறி நமச்சிவாயத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த நமச்சிவாயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயராமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.