சேலம் மாவட்டத்தில் உள்ள நகரமலை அடிவாரத்தில் கோல்டன் வேல்யூ குடியிருப்பில் ரங்கநாதன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவியும் பல் டாக்டராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் சிகிச்சைக்காக ரங்கநாதனின் மனைவி சென்னைக்கு சென்று விட்டார். இதனால் ரங்கநாதன் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தூங்கிய ரங்கநாதன் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் அவரது தாய் மகனின் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது வாயில் ரத்தம் வடிந்த நிலையில் மர்மமான முறையில் ரங்கநாதன் கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ரங்கநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.