திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்வார்பட்டி அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? விபத்தை ஏற்படுத்திய வாகனம் எது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.