தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் கிராமத்தில் விவசாயியான வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் கோவிலில் வைத்து பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நல்லம்பள்ளி ஊர் நல அலுவலர் மல்லிகா விசாரணை நடத்திய போது வேடியப்பன் சிறுமியை திருமணம் செய்து கொண்டது உறுதியானது.

இதுகுறித்து தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வேடியப்பன் மீது குழந்தை திருமண தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.