தென்காசி மாவட்டத்தில் உள்ள நல்லூர் தங்கம்மன் கோவில் தெருவில் மாரிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சஜிதா கடந்த 13-ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் சிஜி ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சஜிதா நெல்லை டவுன் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த தனது உறவினரான சுபிதா என்பவரிடம் கணவருக்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை கொடுத்து 20 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இதனையடுத்து வீட்டு பத்திரத்தை மாரிச்செல்வம் தேடியுள்ளார். இதனால் சஜிதா பத்திரத்தை தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு சுபிதா 1 1/2 லட்ச ரூபாய் கொடுத்தால் தான் வீட்டு பத்திரத்தை திரும்ப தருவேன் என கூறியதால் மன உளைச்சலில் சஜிதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்த போலீசார் சுபிதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.