சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைந்து ஒருங்கிணைத்து வாடிக்கையாளர் சந்திப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, காரைக்குடி மண்டல மேலாளர் லீனா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அனைத்து வங்கிகளின் சார்பாக கல்வி கடன், தொழில் கடன், மகளிர் சுய உதவிக் கடன்கள், விவசாய கடன், வாகன கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் என மொத்தம் 174 பேர்களுக்கு ரூ.14 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் உள்ள கடன் உதவிக்கான ஆணையை கலெக்டர் வழங்கியுள்ளார்.