திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி நகரை சேர்ந்த ஜெயலட்சுமி மும்பையில் தங்கி இருந்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் ராம்நகர் பகுதியில் 5 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் மும்பையில் போதிய வருமானம் இல்லாததால் சொந்த ஊர் திரும்பிய ஜெயலட்சுமி தான் வாங்கிய நிலத்தை பார்வையிட சென்றபோது, அந்த இடம் போலியான ஆவணம் மூலம் வேறொருவர் பெயரில் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயலட்சுமி நெல்லை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் கொடுத்துள்ளார். அவரது உத்தரவின் படி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ், இன்ஸ்பெக்டர் மீராள்பானு ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்டு நிலத்திற்குரிய ஆவணத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயலட்சுமியிடம் வழங்கியுள்ளார்.