ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெல் புதிய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றனர். கடந்த 20-ஆம் தேதி மர்மண்ணபர்கள் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்த 8 வீடுகளின் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது, வீடுகளில் இருந்த 20 பவுன் தங்க நகை இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். கொள்ளையர்கள் பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராவில் அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ச்சியாக அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெறுவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.