திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மண்டலி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மப்பேடு பகுதியில் உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் உடற்பயிற்சி கூடத்தை மூடிவிட்டு மணி மோட்டார் சைக்கிளில் சின்ன மண்டலி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் மணியை வழிமறித்தனர். அவர் நிற்காமல் வேகமாக சென்றார்.

ஆனாலும் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அவரை பின்தொடர்ந்து சென்று கத்தியால் மணியின் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த மணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிரசுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.