கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மரியாளம் பகுதியில் முனேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கவிதா பிரசவத்திற்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 13-ஆம் தேதி கவிதாவுக்கு பெண் குழந்தை இறந்து பிறந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் மூர்த்தி ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பெண் குழந்தை இறந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.