கரூர் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி பாளையத்தில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1 1/2 ஆண்டுகளாக வீரமணி ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்து பெற்றோர் வீரமணியை கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த வீரமணி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வீரமணியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வீரமணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.