மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்தவர்  சரவணன். இவருடைய மனைவி மேனகா. சரவணன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் திருப்பரங்குன்றம் படப்படி தெருவில் உள்ள ஒரு வீட்டை விலைக்கு வாங்கி தருவதாக சிலர் என்னிடம் கூறினர். உடனே நானும் அதற்கு ஒப்புக்கொண்டு ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை அவர்களிடம் கொடுத்தேன்.

அவர்களும் போலி ஆவணங்கள் மூலம் அந்த பணத்தை பெற்று, பின் பத்திரப்பதிவு எதுவும் செய்து தராமல் ஏமாற்றினர். மேலும் இது குறித்து அவர்களிடம் கேட்டபோது கொலை செய்வதாக மிரட்டி வருகிறார்கள். ஆகவே இதனைப் பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். எனவே இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.