மத்தியபிரதேசம் ரேவா-சத்னா எல்லை பகுதியில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த 3 பேருந்துகள் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 14 போ் இறந்தனர். அதோடு 60 போ் காயமடைந்துள்ளனா். இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது, “பா்கடா கிராமத்துக்கு அருகில் சுரங்க சாலைக்கு அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இவ்விபத்து நோ்ந்துள்ளது. சத்நா நகரில் மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா கலந்துகொண்ட கோல் மஹாகும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் இப்பேருந்துகளில் ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா்.

அப்போது ஒரு பேருந்து டயா் வெடித்ததால், அதை சரிசெய்வதற்காக அடுத்து வந்த 2 பேருந்துகள் உட்பட 3 பேருந்துகளும் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி, நின்றிருந்த பேருந்துகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்று கூறினர்.