ஒடிசா மாநிலம் ஜஜ்பூா் மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயணிகளை ஏற்றி வந்த மினி லாரி மோதிய விபத்தில் 7 போ் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக ஜஜ்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வினித் அகா்வால் கூறியதாவது, “இவ்விபத்தில் மினி லாரியில் பயணம் மேற்கொண்ட 6 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதனிடையில் ஒருவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். உயிரிழந்த அனைவரும் மேற்கு வங்க மாநிலத்தை சோ்ந்தவா்கள் ஆவர். நீல்பூா் பகுதி என்.ஹெச்-16 நெடுஞ்சாலையில் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட விபத்தில் இறந்த கறிக் கோழிகளை சேகரிப்பதற்காக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து புவனேசுவரம் நோக்கி இந்த மினி லாரி வந்துள்ளது” என கூறினார்.