திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா பகுதிக்குள் நேற்று மதியம் காட்டெருமைகள் நுழைந்தது. இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஹோட்டல் பிடித்தனர். இதனையடுத்து காட்டெருமை கம்பீர தோற்றத்துடன் ஒரு மணி நேரம் பூங்காவில் உள்ள வந்து புற்களை மேய்ந்தன.

இதனை சுற்றுலா பயணிகள் செல்போனில் படம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து காட்டெருமைகள் வனப்பகுதியில் சென்றதால் சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர். எனவே காட்டெருமைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.